திங்கள், 28 மார்ச், 2011

ஜென் குட்டிக் கதைகள்

குவளையைக் காலி ஆக்கு
ஜென் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான்-இன் என்ற ஜப்பானிய ஜென் குருவைப் பார்க்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் வந்தார். நான்-இன் அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்க ஆரம்பித்தார்.
விருந்தினரின் குவளை முழுவதும் தேநீர் நிரம்பியது. ஆனால் இன்னும் அவர் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார்.
தேநீர் ததும்பி வழிவதைப் பார்த்த பேராசிரியரால் பொறுக்க முடியவில்லை.
"இது நிரம்பி விட்டது. இதற்கு மேல் இந்தக் குவளையில் இடம் இல்லை"என்றார்.
நான்-இன் கூறினார், "இந்தக் குவளை போலவே நீங்களும் உங்கள் ஊகங்களினாலும் அபிப்ராயங்களினாலும் நிரம்பி இருக்கிறீர்கள். அதைக் காலி செய்யாதவரை உங்களுக்கு ஜென் என்றால் என்ன என்பதை நான் எப்படிப் புரிய வைக்க முடியும்?"
நன்றி: மஞ்சரி அக்டோபர் 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக