வியாழன், 31 மார்ச், 2011

'True Grit' Trailer HD

  பார்த்ததில்  பிடித்தது   இது போன்று நிறைய ஆங்கில படத்திற்கு விமர்சனத்துடன் கூடிய முழு  வீடியோ படமும் உள்ளது .

http://kanuvukalinkathalan.blogspot.com

தில்


பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..
ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.
படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.
நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.
true-grit-2011-18464-2069476055டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.
கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]
ட்ரெயிலர்

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

 அன்பார்ந்த நண்பர்களே

நான் வாசித்த இந்த கட்டுரை மிக அருமையாக இருந்தது,இது போன்று நாம் அடிமையாகிகொண்டிருக்கும்  பதிவுகள்    நிறைய இந்த இணையத்தில் உள்ளது .   www.vinavu.com

 மிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவதாகவும், கொள்கை முடிவுகள் பலவற்றை எடுக்கப் போகிறது என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே? நமது பிரச்சினைகளும் நல்வாழ்வும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறதல்லவா?

ஒருவேளை அரசியல் கட்சிகளின் மேலான நம்பிக்கையை இழந்து விட்டவராயிருப்பின் நீங்கள் இவ்வாறும் நினைக்கலாம் – “இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம் தான் சார். எல்லாம் படிக்காத பயலுங்க. ஆனா, நல்லா படிச்ச ஆபீஸருங்க கிட்ட நிர்வாகத்தை ஒப்படைச்சிட்டா எல்லாம் சரியாப் போகும்”. இதில் படித்தவர் நல்லவன் தப்பு செய்யமாட்டான் என்றும் படிக்காதவனெல்லாம் அயோக்கியனென்றும் தொனிக்கும் பாரமரத்தமான அரசியல் புரிதலை ஒருபக்கம் வைத்து விட்டாலும் கூட, நமது அரசின் முக்கியமான உள்நாட்டுக் கொள்கைகளும் அயல் விவகாரத் துறைக் கொள்கை முடிவுகளும் நம்மவர்களாலேயே எடுக்கப்படுகின்றது என்கிற நம்பிக்கை உங்களுக்கு அசைக்க முடியாமல் இருக்கிறது அல்லவா?
ஆம் எனில் உங்களுக்கு சில மிக முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

உண்மையில் இந்த தேசத்தை ஆள்வது யார்?

கடந்த பதினான்காம் தேதி தொடங்கி இந்து பத்திரிகையில் விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் வசம் பல்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள் தமது தலைமையகத்திற்கு அனுப்பிய இரகசியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் கிடைத்துள்ளன. அவற்றில் இந்தியா தொடர்பான கேபிள்களை தற்போது இந்துப் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வெளியாகி வரும் இந்த ஆவணங்களைக் கவனமாக வாசிக்கும் எவருக்கும் சில அடிப்படையான சந்தேகங்கள் எழுந்திருக்க வேண்டும். அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் அனுப்பும் அனேகமான கேபிள்களில் தமக்கு மேற்படித் தகவல்களைக் கொடுத்தது முக்கியமான அலுவலகங்களில் இருக்கும் தமது  ‘தொடர்புகள்’ என்றே குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு துறையின் தலைமைச் செயலகத்திலும் உள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள தமக்கு விசுவாசமான ஐந்தாம்படை ஆட்களை விதைத்துள்ளது தெரியவருகிறது.
இந்த ஆவணங்கள் வெளியாகத் துவங்கிய நாட்களில் பிற முதலாளித்துவ ஊடகங்களில் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் தற்போது மட்டுப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களின் நினைவுகளில் இருந்தும் இவ்விவகாரங்கள் மங்கிப் போய் விடலாம். ஆனால், இங்கே அரசாங்க மட்டத் தொடர்புகளைப் பேணும் நோக்கத்தோடு இயங்கி வருவதாகச் சொல்லப்படும் அமெரிக்கத் தூதரமும் அதன் அதிகாரிகளும் ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்கள் வரையிலும் தொடர்புகளை உண்டாக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று ஊடகங்களோ பாராளுமன்றத்தில் வாய்கிழியப் பேசும் எதிர்க்கட்சிகளோ கேள்வியெழுப்பவில்லை. அவர்களின் இந்தக் காரியவாத மௌனம் என்பது அமெரிக்கர்கள் நமது தேசத்தையும் அதன் நிர்வாக இயக்கத்தையும் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான  முடிவுகளையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சுயமாக எடுத்துக் கொண்டு விட்ட உரிமையை  மறைமுகமாய் அங்கீகரிப்பதாய் இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்ற மிக முக்கியமான பதவியில் உள்ளவர்களோடு கூட தனிப்பட்ட முறையில் மாமன் மாச்சானிடம் பேசுவது போன்று மிக இயல்பாகப் பேசி உள்விவகாரங்களைக் கறந்துள்ளனர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே நாராயணனுக்கும் சிதம்பரத்துக்கும் இடையே நடந்த குத்துபிடி விளையாட்டை அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்தோடு கவனித்து வந்துள்ளார்கள். 2010-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்கத் தூதர் திமோத்தி ரோமர் அனுப்பும் கேபிளில் இவற்றைப் பற்றி மிக விலாவாரியாக அலசுகிறார். இதில் அமெரிக்க அதிகாரிகளிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினைகளைப் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து நாராயணனிடம் பேசிய விவரங்களைப் பதிவு செய்யும் ரோமர், நாராயணன் போன்று அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமாய் இருக்கும் ஒருவர் கிடைப்பது அரிது என்பதையும் தவறாமல் பதிவு செய்கிறார். அமெரிக்க நலன் சார்ந்த முடிவுகளை இந்திய அதிகார வர்க்கத்திடையே செயல்படுத்துவதில் நாராயணன் மிகவும் திறம்பட செயல்பட்டதாக அவருக்குப் பாராட்டுப் பத்திரமும் வாசிக்கிறார். இப்படி, ஒவ்வொரு துறையிலும் தமக்குத் தகவல்கள் அளிக்க ஐந்தாம் படைகளை நிறுவி, அதன் உள்விவகாரங்களைப் பற்றிய உளவுத் தகவல்களைப் பெற்று வந்துள்ளனர்.
இவர்கள் தூதரக அதிகாரிகளா இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவாளிகளா? இவர்களுக்கு எந்தக் கூச்சமும் இன்றி தகவல்களை அளிக்கும் இந்த அதிகாரிகள் அமெரிக்கக் கைக்கூலிகள் இல்லையா? போலி கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் ஏன் அமெரிக்க அதிகாரிகள் நமது நாட்டு உயர் அலுவலகங்களில் மூக்கு நுழைப்பதைக் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்?
படித்தவர், அப்பழுக்கற்றவர் என்பது போல முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் மன்மோகன் சிங்கிலிருந்து அழகிரியின் கையாளான பட்டுராஜன் வரைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலியை அமெரிக்க தூதரக அதிகாரிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மாநிலத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வக்குகளை வளைப்பதில் இருந்து தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுத்து எதிர்க் கட்சிகளின் எம்.பிக்களை வளைப்பது  வரைக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் இவர்கள் மனம் விட்டு ‘விவாதிக்கிறார்கள்’ என்றால் – இவர்கள் யாருடைய ஆட்கள்?

மன்மோகன் சுதந்திரஇந்தியாவின் பிரதமரா; காலனிய கால வைசிராயா?

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சமயத்தில் ஹிலாரி கிளிண்டன் இங்குள்ள தூதரக அதிகாரிக்கு கேபிளில் அனுப்பிய கேள்விகளை நீங்கள் கவனமாகப் படித்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். அது அமெரிக்கர்களுக்கு மன்மோகன் மேல் இருக்கும் ஆழ்ந்த அக்கறை. அதில் பிரணாப் எந்தத் (தரகு) முதலாளிக்கு நெருக்கமானவர் என்பதில் தொடங்கி அவருக்கும் மன்மோகனுக்கும் உள்ள உறவு என்ன, ஏன் மான்டேக் சிங் அலுவாலியா நிதி அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்று நிறைய கேள்விகளை முன்வைக்கிறார். இன்னும் வெவ்வேறு கேபிள்களின் உள்ளடங்கங்களில் ஒரு சங்கிலி போல் துலக்கமாகவும் எடுப்பாகவும் இந்த அம்சம் தெரிகிறது.
மன்மோகன் மேல் இத்தாலிய அன்னை சோனியா காந்திக்கு இல்லாத அக்கறை அமெரிக்க அன்னை ஹிலாரி கிளிண்டனுக்கு இருப்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்? நீங்கள் மறைந்து கிடக்கும் ஒன்றின் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் முதலில் அதனால் விளைந்த காரியம் என்னவென்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மன்மோகன் தன் வரலாற்றில் சாதித்துக் கொடுத்த காரியங்களே அவரை அமெரிக்க சேவல் அடைகாத்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள்.
பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் திறந்து விட்ட விசுவாசமாகட்டும், இந்தியாவின் வளங்களைக் கூறு போட்டுத் தன் குலசாமிகளான ஏகாதிபத்திய முதலாளிகளுக்குப் படையலிட்ட பக்தியாகட்டும், நிதிமூலதன சூதாடிகளுக்கு தேச எல்லையைத் திறந்து விட்ட அடிமைத்தனமாகட்டும், இராணுவ ஒப்பந்தங்கள் எனும் பெயரில் தேசத்தின் இறையாண்மையைக் காவு கொடுத்த கைக்கூலித்தனமாகட்டும், அமெரிக்க அணு ஒப்பந்தம் எனும் பெயரில் நாட்டின் சத்தித் துறையை பலிகடாவாக்கிய துரோகத்தனமாகட்டும் – இன்னும் இது போல் எண்ணிரந்த சந்தர்பங்களில் மன்மோகன் சிங் என்னும் இந்த முன்னாள் உலக வங்கி அதிகாரி தனது அமெரிக்க எஜமானர்களுக்கு சாதித்துக் கொடுத்த காரியங்களைப் பட்டியலிடுவதானால் அதற்கு தனியே ஒரு புத்தகமே போட வேண்டியிருக்கும் – அதன் காகிதங்களுக்கு இந்தியக் காடுகள் மொத்தத்தையும் கூட அழிக்க வேண்டியிருக்கலாம்.
இதனால் தான் மன்மோகன் சிங்கிற்கு வேறு எவர் மூலமும் எந்த நெருக்கடியும் விளைந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்துகிறது. அயல் விவகாரக் கொள்கைகளில் தனது சொந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் கடந்து இந்தியா செயல்பட மன்மோகன் சிங் தான் காரணம் என்பது அம்பலமாகியிருக்கிறது. பதினெட்டாம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள கேபிள் ஒன்றில் 2005-ஆம் ஆண்டு மன்மோகனின் அமெரிக்க விஜயத்திற்கு முன் அப்போது தூதராயிருந்த டேவிட் முல்ஃபோர்ட் அனுப்பிய தகவல்களில், ஈரான் விஷயமாய் ஒரு கடினமான முடிவை எடுக்க வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் தயங்குவதாகவும், மன்மோகன் அமெரிக்கா வரும் போது இது பற்றிக் கறாராக பேசி விடவேண்டும் என்றும், ஈரான் விஷயத்தில் தயங்குவது அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற தடையாய் இருக்கும் என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்றும் அவர் தகவல் அனுப்புகிறார்.
பின்னர் இந்தியா ஈரானை ஐ.ஏ.இ.ஏவில் கைவிட்டது நாம் அறிந்த செய்தி தான். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக விளங்குகிறது. ஒன்று – துறைசார்ந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் மீறி மன்மோகன் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்திய நலன்களை பலிகொடுத்துள்ளார்; இரண்டு – அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தியுள்ளது. அதாவது பிளாக்மெயில் செய்துள்ளது.
ஹிலாரியின் மேற்படி கேபிளில் வேறு சில சுவாரசியமான கேள்விகளும் இருக்கின்றன. மான்டேக் சிங் அலுவாலியாவிற்குத் தற்போது கொடுக்கப் பட்டுள்ள பணியைப் பற்றியும் அதில் அவர் திருப்தியாய் இருக்கிறாரா என்று மிகுந்த அக்கறையோடு குசலம் விசாரிக்கிறார் ஹிலாரி. அவரது கேபிளில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்த பதில்கள் என்னவென்பது  இன்னும் வெளியாகவில்லை – இருந்தாலும் அந்த பதில்கள் என்னவாயிருக்கும் என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகங்கள் ஏதும் இருக்காதல்லவா?
ஆளும் கட்சி மட்டுமல்லாது சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களோடும் நட்பு ரீதியில் ‘உரையாடும்’ தூதரக அதிகாரிகள், அவர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களால் அமெரிக்க நலனுக்கு  ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் அலசுகிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அத்வானியைச் சந்தித்துப் பேசும் தூதரக அதிகாரி ஒருவர், அவரால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எவ்வித பாதிப்பும் வந்து விடாது என்றும், இதை அவரே தன் வாயால் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்றும் குறிப்பிடுகிறார். இன்றைக்கு தொடர்ந்து கேபிள்கள் வெளியாகிவரும் சூழலில், அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான முக்கியமான தகவல்கள் இருக்கும் நிலையில், இவற்றை முன்வைத்து தமது சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட எதிர்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இத் தகவல்கள் வெளியானது தொட்டு இன்று வரையில் இவர்கள் பாராளுமன்றத்தில் போட்டு வரும் கூச்சல்கள் கூட மக்களின் கவனத்திற்கு அப்பால் தான் நடக்கிறது என்பதோடு அதன் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மிக முக்கியமாக, இந்த அம்பலப்படுத்தல்களை மக்களிடையே எடுத்துச் சென்று அரசை வீழ்த்த வேண்டு என்கிற முனைப்பு இவர்கள் எவரிடமும் இல்லை.
இந்த விக்கிலீக்ஸ் கேபிள்கள் ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலின் ஒரு சிறிய அங்கத்தின் ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தை நமக்கு வழங்குகிறது. அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒரு பக்கம் சட்டத்திற்குப் புறம்பான வகைகளில் ஒரு உளவுச் சங்கிலியை உருவாக்கி வைத்துள்ளது. இராணுவம், போலீசு தொடங்கி சகல அரசு மட்டங்களிலும், கலை கலாச்சாரத் துறைகளிலும், என்.ஜி.ஓக்கள் மூலம் சமூகமட்டத்திலும் – சரியாகச் சொன்னால் – ஒரு ஆக்டோபஸ்ஸின் கரங்கள் எப்படி சகல திசைகளிலும் நீண்டு இயங்குகிறதோ அவ்வாறே இந்த வெவ்வேறு கரங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் இயங்கி, அங்கேயிருந்து தகவல்களைச் சேகரித்து அனுப்ப  அமெரிக்காவில் உள்ள தமது தலைமையகத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. இது நீளும் ஒவ்வொரு திசையிலும் தமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது, சூழலைத் தமக்குச் சாதகமாக முன்னெடுத்துச் செல்வது என்று நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு பிரம்மாண்டமான இயந்திரம் போல இயங்குகிறது.
உலகெங்கும் புவியியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை மிகத் தந்திரமாகத் தன் வலைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. இதற்காக, பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை உண்டாக்குவது, உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்களுக்கு ஆயுத உதவி வழங்கி  திடீர் புரட்சிகளை உண்டாக்குவது, இராணுவப் புரட்சிகளை ஏற்பாடு செய்வது, பொம்மை சர்வாதிகாரிகளை நிறுவுவது என்று சந்தர்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கிறது. ஈராக் போன்று தனக்குப் பணியாத நாடுகளில் மொன்னையான காரணங்களை முன்வைத்து நேரடியாகவே இராணுவத் தலையீடு செய்யவும் தயங்குவதில்லை. இதற்கு, தென்னமெரிக்க நாடுகள் தொடங்கி, பல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே உள்ளன.
இந்தியாவைப் பொருத்தளவில், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கெல்லாம் இங்குள்ள தலைவர்கள் ‘ஒர்த்’ இல்லை என்பதாலும், அவர்கள் ஏற்கனவே அமெரிக்க அடிமை வேலைக்கு மனுப் போட்டுக் காத்திருக்கும் அற்பப் புழுக்கள் என்பதாலும் இங்கே அவர்களின் அணுகுமுறை வேறு விதமாய் உள்ளது. மக்கள் மத்தியில் பரவலான என்.ஜி.ஓ வலைப் பின்னலும், பல்வேறு மட்டங்களில் சட்டவிரோதமான உளவாளிகள் வலைப்பின்னலும், அரசு மற்றும் அரசாங்க மட்டத்தில் நேரடியாக தூதரக அதிகாரிகளும் இந்தியாவின் முடிவுகளைக் கண்காணிக்கவும், ஒற்றறியவும் செய்து வருகிறார்கள்.
இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க நேரடியான இராணுவ ஒப்பந்தங்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மார்ச் 28-ஆம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் விளைவாய் அமெரிக்கா அறுவடை செய்யக் கூடிய பலன்களைப் பற்றி தூதரக மட்டத்தில் பரிமாறிக் கொள்ளப் பட்ட கேபிள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் சுமார் 27 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மேல் ஓரளவு சந்தேகம் தெரிவிக்கும் அதிகாரிகளையும் மீறி, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை இன்னும் அதிகமாக்க ஆளும் கும்பல் எடுத்து வரும் முயற்சிகள் பலவற்றையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், அமெரிக்கா தான் விற்கும் ஆயுதங்களின் பயன்பாட்டைக் கண்கானிக்கும் உரிமையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இந்திய இராணுவத் தளங்களுக்குள் நுழைய முடியும். இது மறைமுகமாக இந்திய இராணுவத்தை அமெரிக்காவுக்கு அடகு வைப்பதற்கு ஒப்பானதாகும். இப்படி பச்சையாக இந்திய நலனை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் இந்த இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் ஒரு தொடர்ச்சி தான் அணு சக்தி ஒப்பந்தமாகும்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதை எதிர்த்து 2008 ஜூலை மாதம் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்கிறார்கள். அப்போது, அரசைக் காப்பாற்ற எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரங்களும் அதை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமே காங்கிரசு பெருச்சாளிகள் விவரித்திருப்பதும் சில நாட்கள் முன்பு விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிளில் வெளியாகி இருந்தது. அந்த சமயத்தில் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த காங்கிரசு, விக்கிலீக்ஸின் வெளியிட்டுள்ள இந்த ஆதாரத்தை சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவைகள் நம்புவதற்கில்லை என்றும் சொன்னது.
அவர்கள் சொல்லி வாயை மூடவில்லை – அவர்களின் எஜமானர்களான அமெரிக்கர்களே அவர்கள் முகத்தில் கரியைப் பூசினர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அப்போதைய தூதர் டேவிட் முல்போர்ட், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளைப் பார்த்து “இதெல்லாம் கோர்ட்டில் நிற்குமா” என்று அடித்தொண்டையில் கத்திய பிரணாப் முகர்ஜியின் முகத்திலும், தாம் பணம் கொடுக்கவில்லையென்றும் அப்படிக் கொடுப்பட்டிருந்தால் தமக்குத் தெரியாது என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் தவறானவை என்றும் விளக்கமளித்த பிரதமரின் முகத்திலும் விக்கிலீக்ஸ் தளத்தை ஆரம்பித்து இரகசியங்களை வெளியிட்டு வரும் ஜூலியஸ் அசாஞ்சே நேரடியாகக் கரிபூசியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களை ஒரு ஆதாரமாகக் கொண்டு வழக்குகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டும் அசாஞ்சே, அங்கெல்லாம் இவை ஆதாரங்கள் என்பதை கடந்து இந்த விவரங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெற்றுள்ள வழிகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறிய அசாஞ்சே, அவர் சொல்வது பச்சைப் பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, இந்த இரகசியத் தகவல்கள் முதலில் விக்கிலீக்ஸில் வெளியாகத் துவங்கியதும் அமெரிக்காவே நேரடியாக அனைத்து உலக நாடுகளையும் தொடர்பு கொண்டு இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி எச்சரித்ததும், அமெரிக்காவின் மாகாணம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் விக்கிலீக்ஸ் தளத்தை பார்க்கத் தடைவிதித்ததும் உள்ளிட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய பதட்டமும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்துமே இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையைப் பறைசாற்றுகிறது.  ஜூலியன் அசாஞ்சே மேல் நேரடியாக இரகசியத்தைத் திருடிய குற்றச்சாட்டை வைத்து கைது செய்ய முடியாமல் நொட்டை நொள்ளையாக பெட்டி கேசு போட்டுக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்பதற்கும் காரணம் இருக்கிறது. அவ்வாறு செய்வது, இந்த இரகசியங்கள் உண்மையானது என்று அமெரிக்காவே சான்றளித்தது போலாகி விடும் – அதாவது திருடனுக்குத் தேள் கொட்டினால், அமுக்கமாக முனகிக் கொள்ள மட்டும் தான் முடியும். வாய் விட்டு அலற முடியாது.
இந்தியாவின் சர்வகட்சிகளும் சேர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வெளியாகி வரும் கேபிள்களைப் பகுதி பகுதியாகத் தனித் தனியே பார்ப்பதும், ஒவ்வொன்றிற்கும் ஓரிரு நாட்கள் கூச்சலிட்டு விட்டு பின்னர் அடுத்ததற்குத் தாவுவதாகவுமே உள்ளனர். இதில் இவர்கள் அனைவருமே அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு வருமளவிற்குத் தமது எதிர்ப்பு சென்று விடக்கூடாது என்பதிலும் இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆக, அனைத்து ஓட்டுக் கட்சிகளும் எந்தப் பாகுபாடுமின்றி அமெரிக்க அடிவருடித்தனத்தை தங்கள் சொந்த குணமாக உணர்வுப் பூர்வமாக வரித்துக் கொண்டு விட்ட ஒரு நிலையில் இருக்கிறார்கள். இங்கே நடத்தப் படும் தேர்தல் கேலிக் கூத்துகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேசம், தேசபக்தி, இறையாண்மை, தேச எல்லையின் புனிதம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இவர்கள் எதார்த்தத்தில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களாகவே இருக்கிறார்கள்  என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.
இதெல்லாம் தெரிந்தது தானே, அமெரிக்காவுக்கு அடங்கிப் போவதைத் தவிர்த்து நமக்கு வேறு என்ன வழி என்று சிந்திக்கும் அடிமைப் புத்திகளுக்கு அல்ல இந்தக் கேள்வி; உண்மையில் நமது நாட்டின் மேல் அக்கறையும் பற்றும் கொண்டவர்கள் தாமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும் – இந்த பன்றிக் குட்டையில் நீங்களும் விழுந்து புரளத்தான் வேண்டுமா? தொண்டைமானின் வாரிசுகள் அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டுத்தான் வருகிறார்கள் ; ஆனால் அவர்கள் தங்கள் மூதாதையர்கள் போலவே தாமும் தலையாட்டி பொம்மைகள்; அப்போது பிரிட்டன் – இப்போது அமெரிக்கா. நீங்கள் தொண்டைமானின் வாரிசுகளோடு உங்களை அடையாளம் காண விரும்புகிறீர்களா இல்லை ஒரு கட்டபொம்மனைப் போல இந்த இழிவுகளை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

எம்.ஜி.ஆர்.-கருணாநிதி-மு.க.முத்து-சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

அன்பார்ந்த நண்பர்களே

நான் வாசித்த இந்த கட்டுரை மிக அருமையாக இருந்தது,இது போன்று  நிறைய பதிவுகள்     இந்த இணையத்தில் உள்ளது http://truetamilans.blogspot.com


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1976-
ம் ஆண்டு அப்போதைய தி.மு.. அரசினை டிஸ்மிஸ் செய்த பின்பு, பிரதமர் இந்திராகாந்தியால் கருணாநிதியின் ஊழல்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த சர்க்காரியா கமிஷன், கருணாநிதியின் சொந்த, பந்தங்கள், வியாபாரங்கள், பத்திரிகைகள், திரையுலகத் தொடர்புகள், கட்சிப் பணிகள், அரசின் செயல்பாடுகள் என்று அத்தனையையும் அலசி ஆராய்ந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக கருணாநிதி தனது மூத்த மகன் மு..முத்துவை ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்த பிள்ளையோ பிள்ளை படத்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் பற்றியும் சர்க்காரியா கமிஷன் விசாரித்தது..!

எம்.ஜி.ஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்துதான், அவருக்குப் போட்டியாக தனது முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு..முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து 'பிள்ளையோ பிள்ளை'(பொருத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் கருணாநிதி.

இந்த முஸ்தீபுக்கு கருணாநிதி வருவதற்கு, 1971 தேர்தலில் அவர் பெற்றிருந்த மிகப் பிரம்மாண்டமான வெற்றியும் ஒரு காரணம். 184 தொகுதிகளில் தி.மு..வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் கட்சியில் தனக்கு ஈடு கொடுக்கும் சக தலைவராக இருக்கும் எம்.ஜி.ஆரை சீண்டிப் பார்க்கவும், முயற்சி செய்தாவது அவரை வீழ்த்தவும் வழி வகை தேடினார் கருணாநிதி.

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் திரையுலகச் சக்கரவர்த்தி என்ற இமேஜை இந்த வயதிலும் உடைக்க முடியாத நிலையில் வேறு யாராவது வந்துதான் இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைமை. இப்போதைக்கு அந்தத் திறமை யாருக்கும் இல்லை என்பதால் எப்படியாவது கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட வேண்டும் என்று துடித்திருக்கிறார் கருணாநிதி.


இதற்கு முன்பாகவே கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் மறைமுகமான முட்டல், மோதல்கள் துவங்கிவி்ட்டன. எம்.ஜி.ஆர். மன்றங்களின் நிர்வாகிகள் பலரும் ஆங்காங்கே போலீஸாரால் கைது செய்யப்பட்டுவதும், மிரட்டப்படுவதும் நடந்து வர இதெல்லாம் ராமாவரம் தோட்டத்தை கொஞ்சம் அசைக்கத்தான் செய்திருந்தன.

இந்த நேரத்தில் 1970-ல் நடந்த இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்வோம். இப்போது கருணாநிதி மக்களுக்காக தானமாக கொடுக்க முன் வந்திருக்கும் அந்த கோபாலபுரம் 4-வது தெருவில் இருக்கும் வீடு அப்போது அடமானத்தில் இருந்திருக்கிறது.. அசலையும், வட்டியையும்கூட கட்ட முடியாமல் அந்த வீடு ஏலத்துக்கும் வந்திருக்கிறது.



இதையறிந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மிகக் குறைந்த சம்பளத்தில் எங்கள் தங்கம் படத்தில் நடித்துக் கொடுத்ததாக தற்போது .தி.மு..வினரும், பழைய சினிமா பத்திரிகைகளும் கூறுகின்றன. இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தின் மூலம்  மேகலா பிக்சர்ஸ் பல லட்சங்கள் லாபம் சம்பாதித்தது. கருணாநிதியும் தன் வீட்டை மீட்டிருக்கிறார். இந்த மேகலா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் முரசொலி மாறன்..!

இவர்கள் இருவருக்குமான மறைமுகமான மோதல் குறித்து சோ ராமசாமி, தனது கலையுலக அனுபவங்கள் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.

இந்த 'எங்கள் தங்கம்' படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்துவிட்ட எம்.ஜி.ஆர். மேக்கப் அறையைவிட்டு வெளியே வரவில்லையாம்.. நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தவரும் மேக்கப் போடாமல் உட்கார்ந்து கொண்டாராம்.. பின்பு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஸ்டூடியோவை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தாராம்..! அங்கே கொஞ்ச நேரம், இங்கே கொஞ்ச நேரம் என்றெல்லாம் போய்க் கொண்டேயிருந்தாரம். அவருடைய காம்பினேஷனில் நடிக்க வேண்டிய சோ தைரியமாக எம்.ஜி.ஆரிடம் போய்என்ன ஸார்..? என்னாச்சு..? இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா? இல்லையா?” என்று விசாரித்தபோது எம்.ஜி.ஆர். சரியாகப் பதிலேதும் சொல்லாமல் ஒப்பேற்றியிருக்கிறார்.

அத்தோடு அன்றைய இரவில் எம்.ஜி.ஆர். வேறொரு படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு போக வேண்டிய நிலைமை. இன்றைக்கு எம்.ஜி.ஆரைவிட்டுவிட்டால் பிறகு ஒரு மாதம் கழித்துதான் பிடிக்க முடியும் என்ற பரபரப்பு..!

படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவாலேயே நிலைமையை சரியாக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருடன் பேசவும் முடியவில்லையாம். காரணம்.. எம்.ஜி.ஆருக்கு உரிய ஊதியம் செட்டில் செய்யப்படவில்லை..! அத்தோடு படத்தில் நடித்தவர்களுக்கும் பணப் பாக்கியாம்.. எம்.ஜி.ஆர். எப்போதும் தனது படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் படத்தில் நடித்தவர்களையும், தொழிலாளர்களையும் அழைத்து யாருக்காவது பணம் பாக்கியிருக்கிறதா என்று விசாரித்து அதனைத் தீர்த்துவைத்துவிட்டுத்தான் கேமிரா முன் வந்து நிற்பாராம்.. அன்றைக்கு அவருக்கே இந்த சோதனை..

அன்றைய மாலையில் இனி பணம் வர வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பின்பே வேறு வழியில்லாமல் சோவுடனான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு பறந்தாராம் எம்.ஜி.ஆர். இதனை நியாபகப்படுத்தும் சோ.. கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்குமான உறவு நீண்ட நாள் நீடிக்காது என்பதை அன்றைக்கே தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

எங்கள் தங்கத்தின் மூலம் கிடைத்தப் பணத்தில் இருந்து எம்.ஜி.ஆருக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கருணாநிதி கொடுத்தாரா, இல்லையா என்று தெரியாது..

ஆனால் அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரை தான் முந்த நினைத்து அதில் ஒரு பகுதியாக அவருக்குப் போட்டியாளை உருவாக்க முனைந்திருக்கிறார். அந்த ஐடியாவின்படி இந்த வயதில் தான் நடிக்கப் போனால் தனது மனைவிகளே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து தனது மகன் மு..முத்துவுக்கு அரிதாரம் பூசி அழைத்து வந்திருக்கிறார் கருணாநிதிஅதுலேயும்  எம்.ஜி.ஆரின் தலைமையிலேயே துவக்க விழாவும், 1972-ல் படத்தின் முதற் காட்சி வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்.

படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய மு..முத்துதனக்கு வழிகாட்டி, குருநாதர் எல்லாமே எம்.ஜி.ஆர்.தான்..” என்று பேசியிருக்கிறார். சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானமும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்.

சிலம்புச் செல்வர் பேசும்போது, “துரோணரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றது போல, எம்ஜிஆரை ஆசானாகக் கொண்ட முத்துவும் அவரைப் போல புகழையும், சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்...” என்று வாழ்த்தியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வாழ்த்திப் பேசும்போது, என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப்படுகிறேன். ஆனால் முத்து ஒருநாள்கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று  வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பேசியதைக் கூர்ந்து கவனித்தால் மு..முத்து பற்றிய அவரது எண்ணத்தை சுலபமாக ஊகிக்க முடிகிறது. உண்மையில் எம்.ஜி.ஆரை இமிடேட் செய்துதான் மு..முத்து அந்தப் படத்தில் தனது முழு திறமையையும் காட்டியிருந்தார்.

வண்ணத் திரைப்படமான இந்தப் படத்தில் முத்துவுக்கு எம்.ஜி.ஆர். போல இரட்டை வேடம். எம்.ஜி.ஆர் போலவே நடை, உடை பாவனையுடன் சண்டையும் போட்டிருக்கிறார். சண்டைப் பயிற்சியாளர்கூட எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பயிற்சியாளரான ஷியாம் சுந்தர்தான்..

பொதுவாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் காட்சியே சற்று ரகளையாக இருக்கும். அப்போதுதான் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும். அது போலவே இந்தப் படத்திலும் அதேபோல் "உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான். ஓய்வில்லாமல் உழைப்பன் நான்' என்று பாடியவாறுதான் அறிமுகமானார் முத்து.

படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமர்க்களமாக இசையமைத்திருந்தார்.

"
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை'

"
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ  மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'

"
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி'

"
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருதே சுகம் இங்கு'

போன்ற பாடல்களை டி.எம்.எஸ்., சுசீலா ஆகியோர் பாடியிருந்தார்கள். மு..முத்துவுக்கு ஜோடி லட்சுமி..!

இந்தப் பாடல்களில்மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ?” என்ற டூயட் பாட்டு வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு ஏதோ ஒரு ஜெர்க் ஆகிவிட்டது. ஏனெனில் இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமானவன் தான்தான் என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதனை எழுதியவர் எம்.ஜி.ஆர். வளர்த்தெடுத்த வாலிதான்..

இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்து வாலிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து அழைப்பு வந்ததாம்.. போனவரை எம்.ஜி.ஆர். சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி சாப்பிட வைத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுஏன்யா.. என் படத்துக்குப் பாட்டு எழுதும்போதெல்லாம் அந்த மூன்று தமிழ் தோன்றியதும்ன்ற வரி உனக்குத் தோணலையா?” என்று வாலியிடம் நேருக்கு நேராகக் கேட்டேவிட்டாராம் எம்.ஜி.ஆர்..!

கண்ணதாசனோடு சில காலம் பிணக்கில் இருந்தபோது தனது படத்தின் முழுப் பாடல்களையுமே வாலிக்குக் கொடுத்து அவரை முன்னுக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்.தான். அப்படி வாழ்வளித்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல் கிடைத்திருந்தால் பொருத்தமாகத்தானே இருந்திருக்கும். வாலி அப்போதே உடனுக்குடன் கலர் மாற தெரிந்து வைத்திருந்திருக்கிறார்..!

படத்திற்கு வசனகர்த்தா வேறு யார்.. கருணாநிதிதான்..! "கணையாழி உனக்கு, கசையடி எனக்காஎன மு..முத்து, மற்றொரு முத்துவிடம் கேட்கும் வசனம் படத்தில் பிரபலமான வசனமாம்.

தனது மருமகனான முரசொலி செல்வத்தைத் தயாரிப்பாளராக வைத்து, அஞ்சுகம் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்து 1972-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார் கருணாநிதி. படம் படு தோல்வி..!

'
பிள்ளையோ பிள்ளை' படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவே 15 லட்சம் ரூபாய்தான். ஆனால், படத்தைத் தயாரித்த அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான்.. பிறகு எப்படி 15 லட்சம் ரூபாய் செலவில் திரைப்படம் எடு்க்க முடியும்? அதுதான் கருணாநிதி.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வெளியில் இருந்து கடனாக வாங்கப்படுகிறது. மீதம் உள்ள 14.23 லட்சம் ரூபாய் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக்கூட இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..?

ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக, எம்.ஜி.ஆரை காப்பியடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்த 14 லட்சத்து 23 ஆயிரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அண்ட் கோ, கிரெசன்ட் மூவிஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களிலும் அஹமது யாசின் என்கிற கட்டுமான கம்பெனி நடத்துபவர் பங்குதாரராக இருந்தார் என்பது யதேச்சையான நிகழ்வாகக் கருத முடியாது.

அதிலும், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தைக் கட்டுவதற்கான கான்ட்ராக்ட் அப்போது இவரிடம்தான் வழங்கப்பட்டது என்பதும் யதேச்சையான நிகழ்வல்ல. 

சரி.. எப்படித்தான் இது நடந்தது..? இதை சம்பந்தப்பட்ட சாட்சி அஹமது யாசின் வாயாலேயே கேட்போமா..?

சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளைதிரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன்.

எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது.

அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”

-
இப்படித்தான் அந்த அஹமது யாசின், சர்க்காரியா கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையெல்லாம் தெரிந்துதான்மகன்பிள்ளையோ பிள்ளைஎன நடிக்கிறான். அப்பன்கொள்ளையோ கொள்ளைஎன அடிக்கிறான்என்று எம்.ஜி.ஆர். காலத்திலேயே .தி.மு..வினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.

தற்போது கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள 'இளைஞன்' படத்தை தயாரிக்க லாட்டரி அதிபர் மார்ட்டின் முன் வந்த செயலை நீங்கள் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கருணாநிதி அன்றைக்கே அப்படித்தான் இருந்திருக்கிறார்..

இந்த நேரத்தில் மீண்டும் ஒரு மலரும் நினைவு..!

கடந்தாண்டு ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, .டி.. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த .டி.. குழுமம்தான்,  700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், .ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு.

1970-களிலிருந்து கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது .டி.. குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு..முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட, ‘பிள்ளையோ பிள்ளைஎன்ற திரைப்படத்தை வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்!

பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இப்போது உங்களுக்கு முழுவதும் விளங்கியிருக்குமே..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 31-03-2011, மாலைமலர், சில இணையப் 
                பத்திரிகைகள்